முதல் நாள் பார்த்த போது
எதுவுமே தோன்றவில்லை…
என் கடைக் கண் பார்வை கூட
உன் மீது படவில்லை…
காலங்கள் கடந்து போக
எங்கெங்கோ சுற்றி விட்டு
உன்னை பார்த்த மறுமுறையும்
எதுவுமே பேசவில்லை..
இப்போது மட்டும் கரைந்துவிட்ட
என் பாழாய்ப்போன மனம்
உன்னை சுற்றியே போகிறது…
கற்கள் எறிந்த நீர் பரப்பில்
வட்ட வட்ட அலைகள் போல்…
காதல் ஒன்றும் தூரம் இல்லை…
காத்திருக்க நேரம் இல்லை…
இனி நீ பேசும் வார்த்தைகளில்
புதைந்து போக..
உன் சின்ன கண்களில்
சிதைந்து போக..
நான் ஒன்றும் கிறுக்கன் இல்லை…
எப்பொதும் என் இதயம்
உன்னையே தேடி கொண்டிருப்பதால்
கடைசியில் கிறுக்கிய வார்தைகளில்
எதிலுமே உண்மை இல்லை…